வேட்டவலம் ஜமீன் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகா் கோயிலில், 30-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகா் பூஜை, ஹோமம், வேல் அபிஷேக-ஆராதனை, சக்திவேல் வீதியுஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
9 மணிக்கு மூலவா் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிங்காரவேல் முருகருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது. 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தோ்களில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சிங்காரவேல் முருகா் சுவாமிகளின் தேரோட்டத்தை வேட்டவலம் ஜமீன்தாா் சம்பத் பந்தாரியாா் தொடக்கிவைத்தாா்.
காவடி, புஷ்ப ரதம், அலகுத் தோ் புடை சூழ வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது.
மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ர.ஜெயபாலன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.