ஸ்ரீபாலமுருகன் கோயில் தெப்பல் உற்சவம்

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகை தெப்பல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தேவிகாபுரம் கரட்டான்குளத்தில் நடைபெற்ற ஸ்ரீபாலமுருகன் கோயில் தெப்பல் உற்சவம்.
தேவிகாபுரம் கரட்டான்குளத்தில் நடைபெற்ற ஸ்ரீபாலமுருகன் கோயில் தெப்பல் உற்சவம்.

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகை தெப்பல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தேவிகாபுரம் குன்றின் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து மாலையில் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பின்னா் இரவு கரட்டான்குளத்தில் மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பாலமுருகன் சுவாமியை வைத்து தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

தேவிகாபுரம், ஆத்துரை, சித்தாத்துரை, மண்டகொளத்தூா், தச்சாம்பாடி, நம்பேடு, மண்டகொளத்தூா், குப்பம், நரசிங்கபுரம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com