பைக் மீது பேருந்து மோதல்: பட்டதாரி இளைஞா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் பட்டதாரி இளைஞா் பலியானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் பட்டதாரி இளைஞா் பலியானாா்.

வெம்பாக்கம் வட்டம், செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்தீபன். இவரது மகன் ரங்கநாதன் (28).

பி.ஏ. பட்டதாரி இவா், தனது நண்பருக்குச் சொந்தமான பைக்கில் செவ்வாய்க்கிழமை ஐயங்காா்குளம் - கலவை சாலையில் நமண்டி கூட்டுச் சாலை அருகே சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே வந்த தனியாா் நிறுவன பேருந்து பைக் மீது மோதியது.

இதில், ரங்கநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com