திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவில், சிறப்பாகப் பணியாற்றிய கோயில் ஊழியா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கோயில் உதவி ஆணையா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் திலக், அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோயில் ஊழியா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற கோயில் ஊழியா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இணை ஆணையா் பேசுகையில் குறிப்பிட்டாா்.
விழாவில், கோயில் பணியாளா்கள் செந்தில், தியாகராஜன், கோபி உள்பட பலா் பலா் கலந்து கொண்டனா்.