மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் ஏப்ரல் 21, மே 1 ஆகிய 2 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுக் கடைகள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியாா் மதுக் கூடங்கள் ஆகியவற்றுக்கு மகாவீா் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) மற்றும் தொழிலாளா் தினத்தையொட்டி புதன்கிழமை (மே 1) ஆகிய 2 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இவ்விரு நாள்களிலும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்போா் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com