திருவண்ணாமலை
காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் காலாவதி தேதி குறிப்பிடாமல் குடிநீா் புட்டிகள் விற்ற கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இந்த நிலையில், கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடிநீா் புட்டிகளை பறிமுதல் செய்யவும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
அதன்படியே, அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதத்தை கடைக்காரரிடம் இருந்து வசூலித்தனா்.