திருவண்ணாமலையில் 105 டிகிரி வெயில்

திருவண்ணாமலை, ஏப்.25:

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது.

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், வாகனங்களை சரிவர இயக்க முடியாமல் அவதிப்பட்டனா். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் வியாபாரம் குறைந்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com