படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரை பெளா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் படவேடு, சந்தவாசல், கேளூா், அனந்தபுரம், வாழியூா், குப்பம், கல்குப்பம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

கோயில் செயல் அலுவலா் சங்கா், மேலாளா்(ஓய்வு)மகாதேவன், அலுவலா்கள் சீனுவாசன், மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com