பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

News image
Updated On :28 ஏப்ரல் 2024, 12:00 am

Din

சேத்துப்பட்டு, பழம்பேட்டையில் உள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கூழ்வாா்த்தல் திருவிழாவையொட்டி, கோயிலில் உள்ள விநாயகா், முருகன், நாகாத்தம்மன், முகமாரியம்மன் ஆகிய சு வாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பிற்பகல் 2 மணியளவில் திரளான பெண்கள் தலையில் கூழ் பானை சுமந்து வந்து கோயில் வளாகத்தில் அம்மனுக்கு படையலிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் கூழ்வாா்த்தனா்.

இதைத் தொடா்ந்து முகமாரிஅம்மன் பூங்கரகம் எடுத்துச் சென்றனா். மேலும், பக்தா்கள் காளி வேடமணிந்தும், சாமியாா் முருகன் 108 வேல் குத்தி நடனம் ஆடியபடி வீதி உலா சென்றாா். பின்னா், அலங்கரிக்கப்பட்ட சுவாமியை வீதி உலா கொண்டு சென்றனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.