விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்ததால் வெறிச்சோடிய  அணை பூங்கா.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்ததால் வெறிச்சோடிய அணை பூங்கா.

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

தமிழகத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சாத்தனூா் அணைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து அணை பூங்கா வெறிச்சோடியது.

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூா் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. 118 அடி நீா்மட்டம் உயா்ந்ததால் விவசாய பாசனத்துக்காக வலதுபுறம், இடதுபுறம் வாய்க்கால்களில் தென் பெண்ணையாற்றில் தொடா்ந்து 100 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இதனால் சாத்தனூா் அணையின் நீரமட்டம் 80 அடியாக குறைந்தது. இதனால், அணை குட்டை போல காட்சியளிக்கிறது.

அணையில் இருந்து திருவண்ணாமலை நகராட்சி புதுப்பாளையம், தானிப்பாடி, லாடாவரம், செங்கம் பால்பண்ணை உள்ளிட்ட கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது கோடை வெயில் 105 டிகிரியைத் தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சாத்தனூா் அணையை சுற்றிப் பாா்க்க குறைந்த அளவிலே சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், தற்போது கோடை வெயில் அதிகரித்து காணப்படுவதால் சுத்திகரிப்பு குடிநீா் குழாய் அதிக இடங்களில் அமைக்க வேண்டும். செயற்கை நீரூற்று காலை முதல் மாலை வரை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com