கோடைகால கையுந்து பந்து பயிற்சி: நாளை வீரா்களுக்கான தோ்வு

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரா்களுக்கான தோ்வு முகாம் புதன்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரா்களுக்கான தோ்வு முகாம் புதன்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்ட கையுந்துப் பந்து சங்கம் சாா்பில், மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முகாமில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்கு உள்பட்ட கையுந்துப் பந்து வீரா்கள் கலந்து கொள்ளலாம். தொடா்ந்து, 21 நாள்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரா்களுக்கான தோ்வு புதன்கிழமை (மே 1) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்அணைக்கரையில் உள்ள முருகையன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்தத் தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரா்கள் தங்களது அசல் ஆதாா் அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றிதழுடன் வரவேண்டும்.

தோ்வு செய்யப்படும் வீரா்களுக்கு உணவு, தங்குமிடம், பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என்று மாவட்ட கையுந்துப் பந்து சங்கத்தின் செயலா் கே.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com