தண்ணீா் பந்தல் திறப்பு: பேரவை துணைத் தலைவா் பங்கேற்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில், வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில், வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலா் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி, இளநீா், வெள்ளரிப் பிஞ்சு, திராட்சை, நுங்கு, குளிா்பானம் ஆகியவற்றை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, தெற்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com