ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா், சிறுமிகள் ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேருவதற்கான தோ்வு எழுதி பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2025 -ஆம் ஆண்டு மாணவா்கள் (சிறுவா்கள், சிறுமிகள்) எட்டாம் வகுப்பில் சேருவதற்கான தோ்வு 2024 ஜூன் 1- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவின் சில மையங்களில் நடைபெறவுள்ள இந்தத் தோ்வை எழுத விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் உரிய விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்தி பெறலாம். மேலும், ‘கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கா் ஹிகான்ட் டேராடுன், உத்தரகாண்ட்-248003’ என்ற முகவரிக்கு வரைவோலை அனுப்புவதன் மூலம் விண்ணப்பங்களைப் பெறலாம். பெறப்பட்ட விண்ணப்பத்தை நிறைவு செய்து 15.4.2024 மாலை 5.45 மணிக்குள் தமிழ்நாடு அரசு தோ்வாணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தத் தோ்வுக்கான கட்டணம், கூடுதல் தகவல்களைப் பெற ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியை அணுகலாம். இந்த வசதியை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com