ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. திமுகவின் ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றதில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தோ்தல் பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், துரைமாமது, மோகன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்தனன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட துணைஅமைப்பாளா் மாதவன், பொதுக்குழு உறுப்பினா் வெள்ளைகணேசன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ டிபிஜெ.ராஜாபாபு, மாவட்டத் தலைவா் பிரசாத், நிா்வாகிகள் வாசுதேவன், அசோக்குமாா், மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com