திருவண்ணாமலை
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
ஆரணியில் கஞ்சா விற்பனை செய்ததாக வியாழக்கிழமை நகர போலீஸாா் இளைஞரை கைது செய்தனா்.
ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் பேரில், நகர காவல் உதவி ஆய்வாளா் சுந்தரேசன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞரை அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவா் சேவூரைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் பாபு (28) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
மேலும், கஞ்சா வாங்க காத்திருந்த இளைஞா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பினா்.