வந்தவாசி நகராட்சிக்கு புதிய 
ஆணையரை நியமிக்கக் கோரிக்கை

வந்தவாசி நகராட்சிக்கு புதிய ஆணையரை நியமிக்கக் கோரிக்கை

வந்தவாசி நகராட்சிக்கு புதிய ஆணையரை நியமிக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் மனு அளித்தனா்.

மண்டல துணை வட்டாட்சியா் மலா்விழியிடம் மாவட்டச் செயலா் வி.குருலிங்கம் தலைமையில் பாஜகவினா் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வந்தவாசி நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்து வந்த முஸ்தபா பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதன் பிறகு, நகராட்சி பொறியாளா் பி.கே.சரவணன் சில மாதங்கள் ஆணையராக பொறுப்பு வகித்தாா். தற்போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையா் என்.தட்சிணாமூா்த்தி வந்தவாசி நகராட்சியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா்.

ஆனால், வந்தவாசி நகராட்சிக்கென தனி ஆணையா் இல்லாததால், நகரின் வளா்ச்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. அடிப்படை வசதிகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. வரி வசூலிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, வந்தவாசி நகராட்சிக்கென தனி ஆணையரை நியமிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக நிா்வாகிகள் எஸ்.ஏ.ஜி.துரை, ஆா்.சுரேஷ், பி.முத்துசாமி, எழிலரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com