ஆற்காடு அருகே குட்டையில் இளைஞர் சடலமாகக் கிடந்தார்.
ஆற்காடு வட்டம், கலவையை அடுத்துள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (30). இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக இவரது மனைவி அவரது தாய்வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கலவை படவேட்டம்மன் கோயில் தெரு அருகே உள்ள குட்டையில் சங்கர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவருடைய தம்பி பிரகாஷ், கலவை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், "தனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாகவும், கழுத்து பகுதியில் காயம் உள்ளதால் அவர் கொலை செய்யபட்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.