அரக்கோணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அரக்கோணத்தை அடுத்த கைனூர் ஊராட்சி, சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் குமரன்(38). தனியார் கார் ஓட்டுநர். இவர், திங்கள்கிழமை தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வேலூர் சென்றார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை குமரன் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி
யடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது
தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.