வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 84-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆர்.காந்தி, முரசொலி மாறனின் உருவப்படத்துக்கு மாலை அணவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில், ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமூர்த்தி, வசந்தி ரவி, ராணிப்பேட்டை நகரச் செயலாளர் டி.பிரகாஷ், துணைச் செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.