அடையாளம் தெரியாத ஆண் சடலம்  மீட்பு

ஆற்காடு அருகே முள்புதரிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

ஆற்காடு அருகே முள்புதரிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா ஊராட்சி, கணபதி நகர் பகுதியில் முள்புதரில் 75 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஆற்காடு கிராமிய  போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேதபப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com