டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்ட கட்டட உரிமையாளர்

ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடைக்கு அந்த  கட்டடத்தின் உரிமையாளர் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடைக்கு அந்த  கட்டடத்தின் உரிமையாளர் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலாங்குப்பம் கிராமத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.   இந்த கடைக்கு அருகாமையிலேயே விஸ்வநாதன் பார் நடத்தி வந்துள்ளார்.  
ஆனால், இதற்கு முறையான அனுமதியில்லாததால்  ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார், விஸ்வநாதனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.  இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த விஸ்வநாதன்,  திங்கள்
கிழமை மாலை டாஸ்மாக் கடையின் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, கடையை மூடி பூட்டுப் போட்டார்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com