வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரா.சுகிர்தராணி ஜீலினா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜி.எழிலன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளங்கலையில் 2,652 பேர், முதுகலையில் 361 பேர் என மொத்தம் 3,013 மாணவர்கள் எழுதிய பருவத் தேர்வு முடிவுகள் www.mgacvlr.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவு எண், பிறந்த தேதியை உள்செலுத்தி தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதேபோல, இறுதியாண்டு மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையெனில் வருகிற ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, ஜூலை 12ஆம் தேதி தேர்வு எழுதலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.