வேலூர்
20 பேருக்கு பணி நியமன ஆணை
வேலூர், அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 20 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
வேலூர், அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 20 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமுக்கு கல்லூரித் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் எம்.ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 20 பேருக்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.