ஏலகிரி மலையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனர். இங்கு14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் சாலையில் இருந்த மலைப் பாம்பைப் பிடித்து காட்டில் விட்டனர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.