பேர்ணாம்பட்டு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரை அடுத்த உமர்ஆபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான ஆர்.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளர் பிரபு வரவேற்றார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் தொகுதி எம்எல்ஏவும், மாநில இணைச் செயலாளருமான ஜெயந்தி பத்மநாபன், மாதனூர் ஒன்றியச் செயலாளர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன், அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர் கமலநாதன், மாணவரணி மாவட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.