பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.