குடியாத்தம் அருகே கூட்டுறவு வங்கியில் திருட முயன்ற சகோதரர்களை போலீஸார் கைது செய்தனர்.
குடியாத்தம் நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை காட்பாடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கோவிந்தாபுரத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் திருட முயன்ற போடிப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் சந்தோஷ்குமார் (29), பிரவீன்குமார் (25) ஆகிய இருவரும் கைது
செய்யப்பட்டனர். இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.