வேலூர்
நந்தியாலம் நந்தீஸ்வரர் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
ஆற்காட்டை அடுத்த நந்தியாலம் கிராமத்தில் ஆற்காடு- வேலூர் சாலையில் அமைந்துள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை நந்தீஸ்வரர்
ஆற்காட்டை அடுத்த நந்தியாலம் கிராமத்தில் ஆற்காடு- வேலூர் சாலையில் அமைந்துள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை நந்தீஸ்வரர் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் ருத்ர மகா யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் ராதா சித்தர் தலைமையில் ருத்ர மகாயாகம் நடைபெற்றது. இதில், திருநந்தீஸ்வரர் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள் பற்குணன், தயாளன், முனிசாமி, மார்கபந்து, ஷாயத்கான் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.