ஆம்பூர் அருகே மேல்மிட்டாளம் மக்கள் நல மன்றத்தின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நல மன்றத்தின் கௌரவத் தலைவரும், வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டலத் தலைவருமான ஆம்பூர் சி. கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார். இதில், மக்கள் நல மன்றத்தின் நீண்ட நாள் உறுப்பினர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மன்றத்தின் தலைவர் சிவகுமார், செயலாளர் நாமதேவன், துணைத் தலைவர் பரந்தாமன், துணைச் செயலாளர் வினோத், பொருளாளர் தரணீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.