ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் அரசமர பள்ளத் தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.