மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்ற ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வேலூர் மண்டல அளவிலான சிலம்பம் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டம் கொழுந்தம்பட்டு கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி உடற்கல்வி ஆய்வாளர்கள் முனியன், மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்ற ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் மாணவர்கள் பல்வேறு எடைப் பிரிவுகளில் 10 பேர் முதலிடமும், 12 பேர் இரண்டாமிடமும், 4 பேர் மூன்றாமிடமும் பிடித்தனர். மொத்தம் 90 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இப்பள்ளி வென்றது.
முதலிடம் பெற்ற 10 மாணவ, மாணவிகளும் அடுத்த ஆண்டு மே 22 முதல் 24-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் எம். தீனதயாளன், முதல்வர் நாகராஜன், துணை முதல்வர் நாராயணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சக்கரபாணி, ராம்கி, சிலம்பம் பயிற்சியாளர் பிரேம்குமார் ஆகியோர் பாராட்டினர்.