நீட் தேர்வை ரத்து செய்து, இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் ஆம்பூர் வருவாய்த் துறை கிராமச் சாவடி எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஆம்பூர் நகரச் செயலாளர் எஸ். தென்னவன் தலைமை வகித்தார். மனித உரிமை ஆர்வலர் ஐ.து. பாபு
மாசிலாமணி, அம்பேத்கர் மன்ற மாநில பொதுச் செயலாளர் நேய.சுந்தர் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் ராஜேந்திரன், தனசேகர், கருணாநிதி, ஜார்ஜ், எஸ்.விமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், சமூக நீதி எழுத்தாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்ட 9-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.