வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சுகாதாரச் சீர்கேட்டுடனும், மருத்துவர்கள் அலட்சியப் போக்குடனும் இருப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வேலூர் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வேலூர் மாநகர துணைச் செயலர் கே.லோகேஷ்குமார் தலைமை வகித்தார்.
அரியூர் வட்டச் செயலர் ஏ.மாணிக்கம் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஆர்.தேவதாஸ் கண்டன உரையாற்றினார். மாநகரச் செயலர் எஸ்.ஏ. சிம்புதேவன், நிர்வாகிகள் சரோஜா, கோவிந்தன், கோவிந்தராஜ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.