அரக்கோணம் அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அரசுப் பணியாளர் புதன்கிழமை இறந்தார்.
சம்பத்ராயன்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபன் (24). இவர், சென்னைத் தலைமை செயலகத்தில் சமூகநலத் துறையில் தட்டச்சராகப் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு பைக்கில் சென்றார்.
அரக்கோணம்-நெமிலி சாலை அருகே சென்றபோது தனியார் பேருந்து மோதியதில் பார்த்திபன் பலத்த காயமடைந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.