இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மற்றும் எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடியாத்தம், ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேலூர் தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா சரிவர இயங்குகிறதா என்றும் பார்வையிட்டார். வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் உடனிருந்தார்.