ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வருமான
வரித் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே தனியார் பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வேலூர் 3-ஆவது மண்டல வருமான வரித் துறை அதிகாரி தேராம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை மாலை 4 மணிளவில் சோதனை நடத்தினர்.
மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை செய்தனர். மருத்துவமனை நிர்வாகம் வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான ஆவணங்கள், கட்டணங்களுக்கான கணக்கு உள்ளிட்டவை குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது.