ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மார்ச் 9-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. அதையொட்டி வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி சார்பு நீதிபதி எஸ்.ராமச்சந்திரன், ஆம்பூர் மாவட்ட முதன்மை உரிமையயில் நீதிபதி ஏ. கதிரவன், குற்றவியல் நீதித் துறை நடுவர் ஜி.ரூபனா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், வங்கி மேலாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள், வழக்குரைஞர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.