வேலூர்
சாலை விபத்தில் தொழிலாளி சாவு
ஜோலார்பேட்டையை அடுத்த பாலங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (48). தொழிலாளியான இவர், புதன்கிழமை
ஜோலார்பேட்டையை அடுத்த பாலங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (48). தொழிலாளியான இவர், புதன்கிழமை தனது வீட்டிலிருந்து,திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சேட்டு, வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.