வேலூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
வேலூர் சுக்கையா வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் சாதுல்லா (26). இவர், செவ்வாய்க்கிழமை காட்பாடியிலிருந்து வேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். விருதம்பட்டு அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், சாதுல்லா நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.