ஆம்பூர் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தில் குபேந்திரனுக்குச் சொந்தமான நிலத்துக்குள் சனிக்கிழமை சுமார் 9 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. அப்பகுதி பொதுமக்கள் அதை பிடித்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பைக் கொண்டு சென்று சென்னப்பமலை காப்புக் காட்டில் விட்டனர்.