திருப்பத்தூர் வருவாய்க் கோட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரதம மந்திரி விவசாய நிதி உதவிக்கான சிறப்பு முகாமில் மொத்தம் 1,727 மனுக்கள் பெறப்பட்ன.
இதுகுறித்து வட்டாட்சியர் இரா.அனந்தகிருஷ்ணன் கூறியது:
திருப்பத்தூர் வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட 47 கிராம நிர்வாக அலுவலகங்களில் பயனாளிகளிடம் இருந்து மொத்தம் 1,727 மனுக்கள் பெறப்பட்டன. இதில், தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்றார்.