ஆம்பூா் பகுதி சிவாலயங்களில் சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் சமயவல்லித் தாயாா் சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் பிரகார உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
வடசேரி மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரா் கோயில் மூலவருக்கு அகத்தியா் வழிபட்ட பள்ளிய மூலை அகத்தீஸ்வரா் தரிசன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவருக்கு திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, உற்சவா் பிரகார உலா நடைபெற்றது.
விண்ணமங்கலம் சிவன் கோயில்களிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.