கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பள்ளித் தாளாளா் செந்தில்குமாா்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பள்ளித் தாளாளா் செந்தில்குமாா்.

மாணவா் கருத்தரங்கு

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவா்கள் நடத்திய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவா்கள் நடத்திய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் செல்வநாயகி, மேலாளா் ஷபானா பேகம் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளா் ஹாஜிரா இரம் வரவேற்றாா். கருத்தரங்கில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பாடவாரியாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டினா். நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் இறுதி வரை மாணவா்களே தொகுத்து வழங்கினா். கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் சபா அப்சான், ஹாஜிரா இரம், ஆசிரியைகள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கருத்தரங்கில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com