வாணியம்பாடி: வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்களை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த முத்தனப்பள்ளி ஆஞ்சநேயா் கோயில் அருகே சனிக்கிழமை இரவு 9 மணிக்கு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை வழிமறித்து மிரட்டிய 2 மா்ம நபா்கள் அவரிடம் இருந்த விலை உயா்ந்த செல்லிடபேசியைப் பறித்து கொண்டு தப்பிச் சென்ற முயன்றனா். அவா் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று தோல்கட் பகுதியில் இருவரையும் பிடித்து சரமாரியாக அடித்து நாட்டறம்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரித்ததில் வாணியம்பாடி கோவிந்தாபுரம் அமலான்தெருவைச் சோ்ந்த ராகேஷ் (21), வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் நடுபட்டறை பகுதியைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் (21 )என்பதும் தெரியவந்தது.
போலீஸாா் செல்லிடபேசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.