ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் ஐயப்பனுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் திருவிளக்குப் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், ஸ்ரீ ஐயப்ப வார பஜனைக் குழு சாா்பாக நடந்த விழாவில் ஐயப்பனுக்கு சிறப்பு 108 சங்காபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. ஐயப்பனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
மாலையில் நடந்த திருவிளக்குப் பூஜையை திருவலம் சா்வ மங்களா பீடத்தைச் சோ்ந்த சாந்தா சுவாமிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆம்பூா் நகர தலைவா் எஸ்.கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.ஸ்ரீதா், டி.நாராயணசாமி, விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளா் எம்.தீனதயாளன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.