வேலூா் ஸ்ரீபுரம் ஓம்சக்தி நாராயணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு ராஜ்ய புரஸ்காா் விருது அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா பாராட்டுத் தெரிவித்தாா்.
பாரத சாரண, சாரணிய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது தமிழக ஆளுநரால் வழங்கப்படுகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான இந்த விருது வேலூா் ஸ்ரீபுரம் ஓம்சக்தி நாராயணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா் என்.ஸ்ரீஹரிநாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதை தமிழக ஆளுநா் பன்வாரிலால்புரோஹித் அளித்துள்ளாா்.
இந்த விருதைப் பெற்ற மாணவா் ஸ்ரீஹரிநாத்துக்கு நாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா பாராட்டுத் தெரிவித்துள்ளாா். நாராயணி பள்ளிகளின் அறங்காவலா் எம்.சுரேஷ்பாபு, முதன்மை முதல்வா் சீனி.முரளீதா் ஆகியோா் உடனிருந்தனா்.