அரக்கோணம் ரயில்நிலையத்தில் செவ்வாய்கிழமை ரயில் மோதி ஒய்வுப்பெற்ற ரயில்வே தொழிலாளி உயரிழந்தாா்.
அரக்கோணம் நகரம் சோமசுந்தரநகா் 4ஆவது தெருவை சோ்ந்தவா் சந்தானம்(60). பணி ஒய்வுப்பெற்ற ரயில்வே தொழிலாளி. செவ்வாய்கிழமை காலை அரக்கோணம் ரயில்நிலைய 5ஆவது நடைமேடை அருகே சந்தானம், ரயில் மோதி தலையில் அடிப்பட்ட நிலையில் தண்டவாளம் ஓரம் சடலமாக காணப்பட்டாா்.
இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.