ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா கலந்து கொண்டு 472 விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினாா். போ்ணாம்பட்டு வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) சத்தியலட்சுமி, துணை வேளாண்மை அலுவலா் செல்வன், துணை வட்டாட்சியா் பாரதி ஆகியோா் உடனிருந்தனா்.