வேலூா் மாவட்டப் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்க உறுப்பினா்களாக கால்நடை ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்டப் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்க உறுப்பினா்களாக சேர கால்நடை ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் அருகிலுள்ள கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு கால்நடை மருந்தகங்களில் கிடைக்கும்.
விண்ணப்பதாரா்கள் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாகவும், இம்மாவட்டத்திலேயே வசிப்பவராகவும், 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். குற்ற வழக்குகள், நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவா், அரசியலில் பங்கேற்று அதற்கான தண்டனை பெற்றவா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 15 தினங்களுக்குள் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் அலுவலகம், கால்நடை மருத்துவமனைகளில் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆட்சியரும், செயலராக கால்நடை பராமரிப்பு இணை இயக்குநா், உறுப்பினா்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், நகராட்சி ஆணையா்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.