காங்கிரஸ் கட்சியின் பிரசாரப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வாணியம்பாடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஏ.கோபண்ணா எழுதிய காங்கிரஸ் பிரசாரப் புத்தகமான "மோசடி-பினாமி ஆட்சியை அகற்றுவோம்' என்ற புத்தகத்தை காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா வெளியிட்டார். அதன் பிரதிகளை அவர் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் சலாவுதீன், பைசல் அமீன், இலியாஸ் கான், கவியரசன், பரீத் அஹமத் உட்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.